Wednesday, October 24, 2012

Vikatan Kavithai

இந்த வார ஆனந்த  விகனடனில்  படித்தது


தவிப்பும் தடயம் தவிர்த்தலும் 

நம்மை அறிமுகமே இல்லாத
இடமாய்  தேட வேண்டும்

சுற்றி முகம் பரிச்சயம்
உள்ளவர்கள் கூடாது

பணி பெண்கள் இல்லாத
கூட்டம்  மொய்க்காத
இடமாய் இருத்தல் நலம்

ஆண் பணியாளர்கள் எனில்
ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு


ஒரு கொலை செய்வதற்கான
அத்தனை நோட்டமிடலும்
ஜாக்கிரதை உணர்வும்
செயலில் வேண்டும்

வக்கிர பார்வையோ
சில்மிச சிரிப்போ
இல்லாத விற்பனையாளன
என்று உறுதி படுத்த வேண்டும்

முதலில் ஒரு
 வீட்டு  உபோயாக பொருளை வாங்கி
தைரியம் கொள்ள வேண்டும்

இத்தனையும்  வேண்டும்
கடையில் கூச்சமின்றி
















































ஆணுறை வாங்க  !!!!

                                                   --ஹேமா  செல்வராஜ் .


No comments:

Post a Comment