Tuesday, October 23, 2012

Anthi neera thendral Katru

படம் : இணைந்த கைகள்
பாடல் : அந்தி நேர தென்றல் காற்று



அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை எங்கே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே

தாலாட்ட தந்தை உண்டு
சீராட்ட அன்னை உண்டு

இன்பம் துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு

ஒரு தாயின் பிள்ளை போலே
உருவான சொந்தம் உண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள்  என்றும் உண்டு


அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



உன் மகனை தோளில்  கொண்டு
உரிமையோடு பாடுவது என்று
அன் நாளில் துணையாய்  நின்று
அன்பு  கொள்ள நானும் உண்டு

தத்து பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து  திங்கள் முடிந்த பின்னே
பட்டு பிள்ளை அவனை காண்பேன்

உறங்காத கண்ணில் இன்று
ஒளி  வந்து தேட கண்டேன்
வலிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்


அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு




தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவை கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு




அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு









No comments:

Post a Comment